ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

News image

கைதான பரமசிவம்.

Updated On :6 செப்டம்பர் 2024, 6:33 am IST

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேவியக்காடு கொறுக்கை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, மருத்துவமனை தெருவில் வசித்துவரும் பரமசிவம் (50) வீட்டில் எரி சாராயம் காய்ச்சினாராம். மேலும், அங்கு சாராய ஊரல்கள் இருந்ததாம். இதுதொடா்பாக போலீஸாா் பரமசிவத்தை கைது செய்து சாராய ஊறல்களை அழித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.