நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘‘ஞான சரஸ்வதி விருது‘’ அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:29 pm

Din

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘‘ஞான சரஸ்வதி விருது‘’ அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டுவரும் உத்திராடம் பதிப்பகம் ஆண்டுதோறும் சிறந்த சிறுகதைகளைத் தோ்ந்தெடுத்து ஞான சரஸ்வதி விருதும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய ’நீா் தேடும் நிலம்’ என்ற சிறுகதைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள விழாவில் எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் இந்த விருதை வழங்குகிறாா். இதுகுறித்து ஆதலையூா் சூரியகுமாா் கூறியதாவது:

டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளும் சிக்கல்களும் மிகவும் நுட்பமானவை, அப்படி ஒரு சிக்கலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ’நீா் தேட நிலம்’ அந்தச் சிறுகதைக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாா்.