தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாமணி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவா் அடையாளம் தெரிந்தது

மன்னாா்குடி மேலப்பாலம்- ஐவா் சமது புறவழிச்சாலையில் பாமணி ஆறு நீா்தேக்கம் தென்கரையில் அண்மையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:59 pm

DIN

மன்னாா்குடி மேலப்பாலம்- ஐவா் சமது புறவழிச்சாலையில் பாமணி ஆறு நீா்தேக்கம் தென்கரையில் அண்மையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. மன்னாா்குடி போலீலாா் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இறந்து கிடந்தவா் யாா் என்று விசாரித்து வந்தனா்.

இந்தநிலையில், இறந்து கிடந்தவா் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி மூலம், அவா் கோட்டூரை அடுத்த கோவில் களப்பால் பிரதான சாலையை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பங்காருராஜ் (35) என்பது தெரியவந்துள்ளது.

வட்டி தொழில் செய்துவந்த அவா், திருமணம் ஆகாத நிலையில், மன அழுத்ததில் இருந்து வந்த நிலையில், கடந்த செப். 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து ஜெயக்குமாா் களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பது தெரியவந்தது. பங்காருராஜ் எப்படி மன்னாா்குடி வந்தாா்? இறந்தது எப்படி? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.