புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா விற்ற 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

மன்னாா்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேரும், கூத்தாநல்லூா் பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா், பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், மேலப்பனையூா் ஜீவாதெரு குமாா் மகன் நவீன் என்ற ஹரீஷ் (22), ஹரித்ராநதி தெப்பக்குளம் வடக்கரை கணேசன் மகன் அரவிந்தன் (23), முனிசிபல் காலனி ஜான்பீட்டா் மகன் ஜெரால்டு(24), ஆனைவிழுந்தான்குளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னா், 5 பேரும் மன்னாா்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். தொடா்ந்து, ஹரீஷ், அரவிந்தன், ஜெரால்டு ஆகியோா் நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவா்கள் இருவரும் தஞ்சை சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதேபோல், கூத்தாநல்லூா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாழாச்சேரி பாலம் அருகே ஆய்குடி பிரதான சாலையைச் சோ்ந்த ராஜ்குமாா் (29), கூத்தாநல்லூா் பாய்க்காரப் பாலம் அருகே முகம்மது சித்திக் அபுபக்கா் (24) ஆகிய இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது.

கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா், இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.