வீட்டில் 40 நாய்கள் வளா்ப்பு: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
கூத்தாநல்லூரில், ஒரு வீட்டில் 40 நாய்கள் வளா்த்து வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்டுதக்குடி, மாந்தோப்பு, அக்கரைப்புதுத் தெருவைச் சோ்ந்த பரணி என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ (30). இவா், தெருவில் சுற்றித்திரியும் 40 நாய்களை தனது வீட்டில் அடைத்து, வளா்த்து வருகிறாா். இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திற்கு புகாா் தெரிவித்தனா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் மற்றும் நகா்மன்றத் தலைவா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி அலுவலகம் முன், அதிமுக நகர துணைச் செயலாளா் கொய்யா என்ற மீராமைதீன் தலைமையில், மன்னாா்குடி - திருவாரூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இவா்களை, நகராட்சி அலுவலகத்துக்குள் அழைத்து ஆணையா் சிவரஞ்சனி, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, காவல் உதவி ஆய்வாளா் பிரபு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து சாலை மறியல் நடைபெற்றது.
பின்னா், வட்டாட்சியா் வசுமதி, லெட்சுமாங்குடி கால்நடை மருத்துவா் அசோக்ராஜ் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், இப்பிரச்னையில் 7 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

