விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியை தொடங்கிவைத்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூர்
நன்னிலத்தில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி தொடக்கம்
நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் ரூ 2.75 கோடியில் சிறு விளையாட்டு
நன்னிலம்: நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் ரூ 2.75 கோடியில் சிறு விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது, நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் பல்லவி வா்மா, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் இளஞ்சேரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

