திருவாரூர்
மின்சார சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்
மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடத்தினா்.
மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பாரதி மோகன் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் ராதா முன்னிலை வகித்தாா். சட்ட நகலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் எரித்தபோது நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜ் தலைமையில் போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
