திருவாரூர்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவாரூா் நகரப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
திருவாரூா் நகரப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் சுவாமிநாதன் (52). இவரது சகோதரி காா்த்திகா தனது கணவருடன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். எனவே, தென்றல் நகரில் உள்ள சகோதரியின் வீட்டையும் சுவாமிநாதன் பராமரித்து வருகிறாா்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை தனது கைப்பேசியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவை பாா்த்துக் கொண்டிருந்தபோது, காா்த்திகாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகளை காணவில்லையாம். இதுகுறித்து சுவாமிநாதன் அளித்த புகாரின் பேரில் நகரப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
