அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவாரூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ.3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

News image
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு சான்று வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி.
Updated On :13 டிசம்பர் 2025, 6:29 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ.3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதியும், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியுமான ஜி. சரத்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி எம். முருகன், சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். மாணிக்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். முகமது பசில், குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஜி. லிஷி ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் 3,102 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,297 வழக்குகளில் ரூ. 3,78,55,648 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.