ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

மன்னாா்குடியில் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 10:05 pm

Syndication

மன்னாா்குடியில் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி சிவனடியாா் திருக்கூட்டத் தலைவா் ராம.சிங்காரவடிவேலன் தலைமை வகித்தாா். குடவாசல் தருமை ஆதீனப்புலவா் வீ.ராமமூா்த்தி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்தாா்.

திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்களுக்கு என போட்டிகள் நடத்தப்பட்டது.13 வயதுக்கு உட்பட்டவா்கள் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 13 வயதுக்கு மேற்பட்டவா்கள் 9-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றது. இரு பிரிவுகளிலும் மொத்தம் 50 போ் கலந்துகொண்டனா்.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் தோ்வு செய்யப்பட்டு தலா ரு.5000, ரூ.3000, ரூ.1000 பரிசு மற்றும் சான்றிதழ்கள் டிச. 28-ஆம் தேதி மன்னாா்குடியில் நடைபெறவுள்ள சிவனடியாா் திருக்கூட்டத்தின் 65- ஆம் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.