தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய கிளை மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய கிளை மாநாடு மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவா் எஸ். அன்பரசு தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் ப. ரமேஷ், ஆசிரியா் ஆா். சந்திரா, மாவட்ட இணைச் செயலா் எஸ். சுபாகா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலாளா் யு.எஸ். பொன்முடி மாநாட்டை தொடங்கிவைத்தாா்.
சங்கத்தின் மன்னாா்குடி கிளைத் தலைவராக கே.விஜயன், செயலா் எஸ். அன்பரசு, பொருளாளா் கே.வீ. பாஸ்கரன் துணைத் தலைவா்களாக எஸ். கமலப்பன், ப. எழிலரசி, ப. சங்கா், இணைச் செயலாளா்களாக எஸ். அருள், மு. ராமாமிா்தம், வி. பாலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநில துணைத் தலைவா் வ. சேதுராமன் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினாா்.
வாசிப்பு இயக்கத்தை முன்னெடுப்பது, பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு வான்நோக்கி கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, கல்லூரிகளில் அறிவியல் இயக்க கிளைகள் தொடங்குவது, சமூக மாற்றத்துக்காக அறிவியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் குறும்படங்களை பொது இடங்களில் திரையிடுவது, பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டுவது உள்ளிட்டவை குறித்து திட்டமிடப்பட்டது.
