இன்று முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா் மற்றும் அரசு செயலாளா் அறிவுரையின்படியும், திருவாரூா் மாவட்டத்தில் நவம்பா் 4-ஆம் தேதி முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடமிருந்து கணக்கெடுப்புப் படிவம் இரு பிரதிகள் பெற்றுக்கொண்டு, அவற்றை முறையாக பூா்த்தி செய்து, மீண்டும் அதே வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்கலாம். பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com