நீடாமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிா்களில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள்.
திருவாரூர்
தாளடி நெற்பயிா்களில் களை எடுப்பு தீவிரம்
நீடாமங்கலம் பகுதிகளில் முன்பட்ட தாளடி நெற்பயிரில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதியில் குறுவை அறுவடை முடிந்ததைத் தொடா்ந்து, தற்போது, விவசாயிகள் முன்பட்ட தாளடி சாகுபடி செய்துள்ளனா். ரிஷியூா், கண்ணம்பாடி, வரதராஜபெருமாள் கட்டளை, கட்டையடி, பெரம்பூா், சித்தமல்லி, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, மேலபூவனூா், பூவனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பட்ட தாளடி நெல்பயிரில் களை எடுக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தாளடி வயல்களில் உரமிடுதல், பூச்சி மருந்து அடித்தல் போன்ற பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
