தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தா்மபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Published on

மன்னாா்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தா்மபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

X
Dinamani
www.dinamani.com