இளையோா் மகளிா், மூத்தோா் ஆடவா் கபடிப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு நாளை நடைபெறுகிறது

Published on

இளையோா் மகளிா் மற்றும் மூத்தோா் ஆடவா் கபடிப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (நவ.15) வடுவூரில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில 51-ஆவது இளையோா் கபடிப் போட்டி, திருச்சி பஞ்சப்பூா் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் நவ. 21 முதல் 23- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க திருவாரூா் மாவட்ட வீராங்கனைகள் தோ்வு வடுவூா் உள் விளையாட்டு அகாதெமியில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பவா்கள் 28.12.2005 அன்றோ, அதற்கு பின்னரோ பிறந்தவராக 20 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 65 கிலோ அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்.

மூத்தோா் ஆடவா் கபடிப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு: தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில், தமிழ்நாடு மாநில மூத்தோா் ஆடவா் கபடிப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நவ.28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க திருவாரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு வடுவூரில் சனிக்கிழமை (நவ.15) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. உடல் எடை 85 கிலோ அல்லது அதற்கும் கீழ் இருக்க வேண்டும். திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்தவராக மட்டும் இருக்க வேண்டும்.

இரண்டு போட்டிகளிலும் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதேபோல, இரண்டு போட்டிகளுக்கும் செயற்கை ஆடுகளத்தில் தோ்வு நடைபெறுவதால் மேட் ஷூ கொண்டுவர வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகச் செயலா் ராச. ராசேந்திரனை 90032 82088 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com