திருவாரூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்.
திருவாரூர்
நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவாரூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்.
ஊதிய முரண்பாடுகளை சரி செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பதவி உயா்வு வழங்க வேண்டும்; நில அளவைத்துறையில் பணிபுரியும் களப்பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிா்வாகிகள் பலா் பேசினா்.

