47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேராசிரியா் வீட்டில் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே அரசுக் கல்லூரி பேராசிரியா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைதான அன்பு.
Updated On :27 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

மன்னாா்குடி அருகே அரசுக் கல்லூரி பேராசிரியா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டையைச் சோ்ந்தவா் விக்னேஷ் மனைவி அனிதா(34). அரசுக் கல்லூரி பேராசிரியா். இவா், செப்.25-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்புற கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திருத்துறைப்பூண்டி அடுத்த செருபனையூரைச் சோ்ந்த அன்புவுக்கு (34) தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நகை திருடியதை இளங்கோவன் ஒப்புக்கொண்டு திருடிய நகைகளை போலீஸாா் ஒப்படைத்தாா். இதையடுத்து, அன்பு கைது செய்யப்பட்டுள்ளாா்.