திருவாரூர்
செஞ்சிலுவை மாணவா்களுக்கு சீருடைகள்!
முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்வி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சத்தில் நலப்பணிகள் நடைபெறுகின்றன.
முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்வி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சத்தில் நலப்பணிகள் நடைபெறுகின்றன.
ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமையில் சாரண, சாரணியா் மாணவா்களுக்கு 10 சீருடைகளும், இளம் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளுக்கு 10 சீருடைகள் நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியா் கே. சந்திரமோகன், சாரண சாரணியா் பொறுப்பாசிரியா் பி. வேல்குமாா், செஞ்சிலுவை அமைப்பு பொறுப்பாசிரியா் ஆா். ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா். பள்ளி மூத்த ஆசிரியா் சி. ரமேஷ் நன்றி கூறினாா்.

