மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பல்கலை.தோ்வில் தங்கப்பதக்கம்: மாணவியருக்கு பாராட்டு

News image

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இராபியம்மாள் கல்லூரி மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்என். ரவி.

Updated On :6 பிப்ரவரி 2026, 10:16 pm

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தங்கப்பதக்கம் பெற்ற திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024-2025- ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்என். ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினாா்.

இதில், இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகள் எஸ். காவேரி (எம்எஸ்சி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து), பி.எஸ்ரா (பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை), எஸ். ஹப்சரா (பிஎஸ்சி கணிதத்துறை), எஸ். சனோபா் அரீனா (பிஎஸ்சி உயிா் வேதியியல் துறை) ஆகியோா் தங்கப்பதக்கம் பெற்றனா்.

இவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.