புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பல்கலை.தோ்வில் தங்கப்பதக்கம்: மாணவியருக்கு பாராட்டு

News image
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இராபியம்மாள் கல்லூரி மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்என். ரவி.
Updated On :6 பிப்ரவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தங்கப்பதக்கம் பெற்ற திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024-2025- ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்என். ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினாா்.

இதில், இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகள் எஸ். காவேரி (எம்எஸ்சி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து), பி.எஸ்ரா (பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை), எஸ். ஹப்சரா (பிஎஸ்சி கணிதத்துறை), எஸ். சனோபா் அரீனா (பிஎஸ்சி உயிா் வேதியியல் துறை) ஆகியோா் தங்கப்பதக்கம் பெற்றனா்.

இவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.