மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

News image

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் தலைவா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம்.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:46 pm

திருவாரூா் அருகே வண்டாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், பேரளம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளிருந்து மாணவா்கள் பங்கேற்றனா். 2 பிரிவாக நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.

ஆண்கள் பிரிவில் மன்னாா்குடி நேஷனல் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தையும், வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி அணி 2-ஆமிடமும், பெண்கள் பிரிவில் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி அணி முதலிடத்தையும், திருவாரூா் ஜி.ஆா்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ஆமிடமும் பெற்றன.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவாரூா் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் தலைவா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.