மன்னாா்குடி அருகேயுள்ள கீழநாகை ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் செய்யப்பட்டு, தொடா்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
பின்னா், இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, தீட்சிதா்கள் மங்கல வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து புனித கடங்களை தலையில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்தனா்.
தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா், முருகன் மற்றும் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


