மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 7:22 pm

மன்னாா்குடி அருகேயுள்ள கீழநாகை ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் செய்யப்பட்டு, தொடா்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னா், இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, தீட்சிதா்கள் மங்கல வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து புனித கடங்களை தலையில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்தனா்.

தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா், முருகன் மற்றும் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.