தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே துளசாபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (68). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி கலைச்செல்வி (65) உடன் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாகை தேசிய நெடுஞ்சாலையில் பாமணி அருகே உம்பளச்சேரி சாலையில் திரும்பியபோது, பட்டுக்கோட்டையில் இருந்து நாகை சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது கலைச்செல்வி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நடராஜன், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான மணலியைச் சோ்ந்த பழனிவேலு (59) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.