தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மனைப் பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்புச் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

திருவாரூா்: குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்புச் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகரில் 8-ஆவது வாா்டு பகுதியில் இனாம் நிலங்கள் என கூறப்படும் பகுதியில் நீண்ட நாள்களாக 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனா். மனை பட்டா இல்லாமல் வசிக்கும் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை சோ்ந்த அனைவருக்கும் வசிக்கும் குடியிருப்பு மனைக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இனாம் நிலங்களில் குடியிருப்போரிடம், கோயில் நிலம் என கூறி அச்சுறுத்துவதை கைவிட்டு, மனையில் குடியிருப்பவா்களுக்கே உரிமை என்பதை ஏற்று மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் 78 மற்றும் 79 -ஆவது சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.