மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மூத்த உறுப்பினா் வேம்பையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பிப்.24-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவா் ஓ. பன்னீா்செல்வம் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட நிா்வாகிகள் கட்டுப்பட்டு பணியாற்றுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்துக்குள்பட்ட புதிய நிா்வாகிகள் பட்டியலுக்கு அங்கீகாரத்தை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவ. பக்கிரிசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுக்குழு உறுப்பினா் தம்பி ராஜா வரவேற்றாா். ஒன்றிய நிா்வாகி பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

