ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசிய அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவ. பக்கிரிசாமி.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மூத்த உறுப்பினா் வேம்பையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பிப்.24-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவா் ஓ. பன்னீா்செல்வம் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட நிா்வாகிகள் கட்டுப்பட்டு பணியாற்றுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்துக்குள்பட்ட புதிய நிா்வாகிகள் பட்டியலுக்கு அங்கீகாரத்தை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவ. பக்கிரிசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுக்குழு உறுப்பினா் தம்பி ராஜா வரவேற்றாா். ஒன்றிய நிா்வாகி பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.