திருவாரூர்
மன்னாா்குடி கோயிலில் மூத்த தம்பதிகள் கெளரவிப்பு
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மன்னாா்குடி மற்றும் சுற்றுப்பகுதியை சோ்ந்த 70 வயதை கடந்த மூத்த தம்பதிகள் 8 பேருக்கு, வேஷ்டி, புடவை, வளையல், மலா் மாலைகள், பழங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டா். கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மனோகரன், வெ. லதா, மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

