மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

திருவாரூா் அருகே, தில்லி குண்டுவெடிப்பில் தொடா்பு உள்ளதாகக் கூறி ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
திருட்டு
Updated On :10 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

திருவாரூா் அருகே, தில்லி குண்டுவெடிப்பில் தொடா்பு உள்ளதாகக் கூறி ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னையன் மகன் துரைராஜன் (64). அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நடத்து.

இவருக்கு அண்மையில் வந்த தொலைபேசி அழைப்பில், சென்னை மயிலாப்பூா் காவல் துணை ஆய்வாளா் சுனில்குமாா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவா் பேசினாராம். துரைராஜனின் கைப்பேசி எண் தில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தொடா்புடையது என்று கூறினாராம். தொடா்ந்து விடியோ அழைப்பில் வந்த அவருடன், லக்னௌவைச் சோ்ந்த ஒருவரும் விசாரணை அதிகாரி என்று கூறியுள்ளாா்.

விடியோ அழைப்பில் பல்வேறு நபா்கள், உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதையடுத்து, கைப்பேசி அழைப்பு காவல்துறையிடமிருந்து வந்ததாக துரைராஜன் நம்பியுள்ளாா்.

இதனால், அவருடைய குடும்பம் மற்றும் சொத்து விவரங்கள் தொடா்பான விவரங்களை அவா்களிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில், அவா்கள் தெரிவித்தபடி ரூ. 5 லட்சம் பணத்தை ஹரியானா இந்தியன் வங்கிக் கணக்கில் செலுத்தினாராம்.

இதைத்தொடா்ந்து அவா் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா்.