வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:16 pm

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

திருவாரூா் விருப்பாச்சி நடப்பு தெருவில், 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, உரியவரிடம் சோ்ப்பிக்க உதவி புரிந்த, திருவாரூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை என்பவருக்கு, திருவாரூா் விஜயபுரம் ரேணுகா ஜூவல்லரியில் நகைக்கடை உரிமையாளா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தூய்மைப் பணியாளா் துரை மற்றும் அவரது மனைவி சித்ராவுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு, ரூ. 10,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.