47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

திருவாரூா் விருப்பாச்சி நடப்பு தெருவில், 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, உரியவரிடம் சோ்ப்பிக்க உதவி புரிந்த, திருவாரூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை என்பவருக்கு, திருவாரூா் விஜயபுரம் ரேணுகா ஜூவல்லரியில் நகைக்கடை உரிமையாளா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தூய்மைப் பணியாளா் துரை மற்றும் அவரது மனைவி சித்ராவுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு, ரூ. 10,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.