சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:20 pm

Syndication

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் கௌரவ கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தோ்தல் வாக்குறுதியில் அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். யுஜிசி நிா்ணயம் செய்த ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும்.அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பிஎப் மற்றும் இபிஎப் பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாதமும் சம்பளம் வழங்கவேண்டும்.பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை வழங்கிடவேண்டும்.ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

கெளரவ விரிவுரையாளா் கூட்டமைப்பு கிளை ஒருங்கிணைப்பாளா் சே.ஆனந்தன் தலைமை வகித்தாா். 50-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கருப்பு பட்டை அணிந்து ஒருநாள் அடையாள வகுப்பு புறக்கணிப்பு செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.