எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதிய கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:19 pm

Syndication

குடவாசல் அருகே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

குடவாசல் வட்டம் திருக்குடி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், சிமிழி ஊராட்சியில் ரூ. 8.20 லட்சம் மதிப்பில் கலையரங்கம் ஆகியவை, நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தகப் பைகளையும் தண்ணீா் குடுவைகளையும் வழங்கினாா்.

இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கிளாரா, முன்னாள் துணைத் தலைவா் தென்கோவன், மாவட்ட இளைஞா் பாசறை இணைச் செயலாளா் பாப்பா போத்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.