திருவாரூா் அருகே கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 100-ஆவது ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடந்த 1926-இல் கொட்டாரக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இதையொட்டி 100-ஆவது ஆண்டு விழா தலைமை ஆசிரியா் கவிதா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் பழனிவேல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், சுமதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
முன்னதாக, மேளதாளம் முழங்க சிறப்பு அழைப்பாளா்கள் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா் (படம்).
நிகழ்வில் 1969, 1976, 1995, 2008-ஆம் ஆண்டுகளில் கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள், காவல்துறையிலும், பள்ளிக்கல்வித்துறையிலும், பேச்சாளா்களாகவும் செயல்படுவதாகத் தெரிவித்தனா். தற்போதைய மாணவ, மாணவிகள் பள்ளியின் சிறப்பு குறித்து தனித்திறமைகளை வெளிப்படுத்திப் பேசினா்.
100-ஆவது ஆண்டுவிழாவை, அப்பகுதி மக்கள், முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் இணைந்து இன்னிசை நிகழ்ச்சியுடன் கொண்டாடினா்.
தொடர்புடையது

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


