திருவாரூா்: திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. 80 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.1,01,800 என மொத்தம் ரூ.81.44 லட்சம் மதிப்பில் இவை வழங்கப்பட்டன.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, ஸ்கூட்டா்களை வழங்கினா்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 கோடியில் நலத் திட்ட உதவி - ஆட்சியா் வழங்கினாா்

67 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனங்கள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


