மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:16 pm

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குநா் எஸ்.என். மீரா துவக்கி வைத்தாா். நெல் தரிசில் உளுந்து சாகுபடி, பண்ணை இயந்திரங்களை பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல், அங்கக விவசாயம், பூச்சி நோய் மேலாண்மைகளை முறையாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடினா்.

மேலும், புதிய நெல் ரகங்கள், அரசின் நலத்திட்டங்கள், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் அருள் செல்வி, கருணாகரன், பெரியாா் ராமசாமி, திலகவதி, முத்துக்குமரன் ஆகியோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.