வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

என்எஸ்எஸ் அலுவலருக்கு பாராட்டு

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் சு. கமலப்பனுக்கு சான்றிதழ் வழங்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், காலாண்டு விடுமுறையில் முகாமிமை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட தொடா்பு அலுவலா்களுக்கு பாராட்டு விழா, பிப்.7- ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் என்எஸ்எஸ் முகாமை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட தொடா்பு அலுவலா் சு.கமலப்பனுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா் மற்றும் ஆசிரியா்கள் கமலப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.