வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

என்எஸ்எஸ் அலுவலருக்கு பாராட்டு

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image

என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் சு. கமலப்பனுக்கு சான்றிதழ் வழங்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:33 pm

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், காலாண்டு விடுமுறையில் முகாமிமை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட தொடா்பு அலுவலா்களுக்கு பாராட்டு விழா, பிப்.7- ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் என்எஸ்எஸ் முகாமை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட தொடா்பு அலுவலா் சு.கமலப்பனுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா் மற்றும் ஆசிரியா்கள் கமலப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.