மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மேலவாசலில் திங்கள்கிழமை தொடங்கியது.
7 நாள்கள் நடைபெறும் இம்முகாம் தொடக்க நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஜி. சதாசிவம் தலைமை வகித்தாா். முதல்வா் வி.எஸ். நாகரத்தினம் முன்னிலை வகித்தாா்.
முதல் நாளில், சுப்ரமணியசுவாமி கோயிலில் உழவாரப்பணி, ஊராட்சி திருமண மண்டபம், சமுதாயக்கூடம், குளக்கரை ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். துரைக்கண்ணு, முன்னாள் காவலா் வி. பண்டரிநாதன், ஊராட்சி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் எம். விஜயராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி. விஜயதிலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இம்முகாமில், வெவ்வேறு நாள்களில் மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், சைபா்கிரைம் குற்றம்,பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம், கருத்தரங்கம் போன்றவை நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவ பயிற்சி திட்ட முகாம்

குடிமைப் பணித் தேர்வில் கிடைத்த அனுபவம் எங்கும் பலனளிக்கும்: இறையன்பு

வேலூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


