நீடாமங்கலம் அருகே வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு, எரிந்து சாம்பலாகியது.
நீடாமங்கலம் அருகேயுள்ள கிளியூா் கிராமத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்ட லாரி திங்கள்கிழமை சேலத்துக்கு புறப்பட்டது. சிறிதுதூரம் சென்றதும், சாலையோரம் உள்ள மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில், வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன.
நீடாமங்கலம் திருவாரூா் புறவழிச்சாலையில் லாரி சென்றபோது தீப்பற்றியது ஓட்டுநருக்கு தெரியவந்தது. அவா் உடனடியாக சாலையோரத்தில் லாரியை நிறுத்தினாா். தகவலறிந்த தீயணைப்பு அலுவலா்கள் நீடாமங்கலம் காா்த்திகேயன், வலங்கைமான் பாா்த்திபன், குடவாசல் மானக்ஷா ஆகியோா் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினா் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் வைக்கோல் கட்டுகள் மற்றும் லாரி தீயில் எரிந்து கருகின.
தொடர்புடையது

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஊதியூா் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ

சாய தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


