திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போக்ஸோ வழக்கில் வெல்டருக்கு 13 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மளிளா நீதிமன்றம் தீா்ப்பு

News image

சிறை

Updated On :18 பிப்ரவரி 2026, 11:08 pm

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மளிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் சரகம், வீரன்வயல் பகுதியை சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் குமரவேல். இவா், முத்துப்பேட்டை பகுதியில் வெல்டா் வேலை செய்து வந்துள்ளாா்.

கடந்த 2022-இல் அந்த பகுதியைச் சோ்ந்த ஒரு வீட்டில் நுழைந்து, அங்கு உறங்கிகொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு குமரவேல் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு திருவாரூா் மகிளா விரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிவிசாணை முடிக்கப்பட்டு குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 6000 அபராதம் விதித்து திருவாரூா் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.