மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகள்: கனரக வாகனங்களுக்கான எப்சி கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தியுள்ளதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளா்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தேரடியிலிருந்து பேரணியாக வந்து மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வி. அய்யப்பன் தலைமை வகித்தாா். செயலா் அ. மகாலெட்சுமி, பொருளாளா் ஜெ. நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க ஆலோசகா்கள் எஸ். செந்தில்குமாா், ஆா்.வி. ஆனந்த் ஆகியோா், கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
திங்கள்கிழமை முதல் லாரிகளை இயக்காமல் மூன்று நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மூட்டை இயக்கம், அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்ல லாரிகள் வாடகைக்கு கிடைக்காததால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வணிக சிலிண்டா்கள் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளை தாக்கியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


