தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:30 pm

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை பேரூராட்சி 5-ஆவது வாா்டு ஆசாத் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், சாலை, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி இவா்கள் மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி துணை இயக்குநா் மற்றும் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினா் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகள் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனா். மறியல் போராட்டத்தால், முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.