மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:31 pm

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (60 ) கூலித்தொழிலாளி. இவரது 2-ஆவது மனைவி செல்வி (55) வழக்கு ஒன்றில் ஆஜராக, நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாா்.

அவா் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த அரிகிருஷ்ணன், செல்வியிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றாராம். இதில் செல்வி கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்கள், அரிகிருஷ்ணனை பிடித்து, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தாா். காயமடைந்த செல்விக்கு, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.