மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் இல. பொம்மி, சி. ராமு, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த. நிருபன் முன்னிலை வகித்தனா்.

முகாமில் தமிழகம் முழுவதிலிருந்தும் 25 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500-க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 222 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கல்லூரி முதல்வா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

மாவட்ட நான் முதல்வன் திட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன்,துறைத் தலைவா்கள் சா.சிவச்செல்வன்,சா.வே.நேதாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.