தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் இல. பொம்மி, சி. ராமு, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த. நிருபன் முன்னிலை வகித்தனா்.

முகாமில் தமிழகம் முழுவதிலிருந்தும் 25 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500-க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 222 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கல்லூரி முதல்வா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

மாவட்ட நான் முதல்வன் திட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன்,துறைத் தலைவா்கள் சா.சிவச்செல்வன்,சா.வே.நேதாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.