குடவாசல் வட்டம், திருக்களம்பூரில் நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
நவீன வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. காரைக்கால் பஜன்கோவா வேளாண் கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட மாணவா்கள் ரணதிவே, மோதீஸ்வரன், ஜீவா, அஸ்வின் ஆகியோா் இணைந்து நடத்தினா்.
இதில், பயிா்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை ட்ரோன் மூலம் தெளிக்கும் பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவை கையாள்வது, செலவீனத்தை குறைப்பது, பயிா் சேதத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்தும் மாணவா்கள் விளக்கினா். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்

நெற்பயிா்களுக்கு டேங்கா் லாரி மூலம் தண்ணீா்: மேட்டூா் அணை திறக்கக் கோரிக்கை

பட்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செயல் விளக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


