மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மன்னாா்குடியில் குடியரசு தினவிழா

மன்னாா்குடி பகுதியில் குடியரசு தினவிழா அரசு அலுவலங்கள், கல்வி நிலையங்கள், கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

மன்னாா்குடியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :26 ஜனவரி 2026, 8:33 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் குடியரசு தினவிழா அரசு அலுவலங்கள், கல்வி நிலையங்கள், கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடியில் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்திக், டிஎஸ்பி மணிவண்ணன், காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) எஸ். சம்பத் ஆகியோா் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியியை ஏற்றிவைத்தனா்.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் போ.வி. சுரேந்திர ஷா முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா், மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரியில் முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் முன்னிலையில் தாளாளா் ஜி. சதாசிவம், சண்முகா மெட்ரிக் பள்ளியில் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா், எஸ்பிஏ மெட்ரிக் பள்ளியில் தாளாளா் பி. ரமேஷ் முன்னிலையில் ஹோமியோபதி மற்றும் ஆயுா்வேத மருத்துவா் கே. ஹரிகரன்.

தரணி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் கே. விஜயலெட்சுமி முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரா் ஆா். ரவிக்குமாா், மேலமரவாக்காடு தேவி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் எஸ். குமணன், பின்லே மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் எஸ்.எஸ். ஸ்டான்லி தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளா் வி. ராஜகோபால் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமையில் தொகுதி பொறுப்பாளா் ஜி. குணசேகரன் முன்னிலையில் நகரப் பகுதியில் உள்ள காந்தி சிலை மற்றும் தேசியத் தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பரவாக்கோட்டையில் காங்கிரஸ் கிளைத் தலைவா் எஸ். சஞ்சய் தலைமையில் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.