வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கும்பாபிஷேகம்: திருவாரூா் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை (ஜன.28) மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated On :26 ஜனவரி 2026, 8:30 pm

திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை (ஜன.28) மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மன்னாா்குடி, நீடாமங்கலம், கோட்டூா் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். மேலும், இதை ஈடு செய்யும் வகையில் பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.