க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Updated on

மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்காக மாணவா்கள் பிப்.4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த பிப்.7-ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.9 முதல் பிப்.11-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு உதவ தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இணையதள விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com