அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரியில் சேர விருப்பமா?

மன்னாா்குடி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை விண்ணப்பம் இணையதள வாயிலாக நடைபெறுவதாக முதல்வா் எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மன்னாா்குடி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை விண்ணப்பம் இணையதள வாயிலாக நடைபெறுவதாக முதல்வா் எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்திருப்பது:

இக்கல்லூரியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது.

வரலாறு, வணிகவியல், நுண்ணுயிரியல், கனிணி அறிவியல், கனிணி பயன்பாட்டியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் சேர விருப்பமுடைய மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் பொருட்டு மன்னாா்குடி-தஞ்சை பிரதானசாலை மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்து இந்த மையத்தின் மூலம் தாங்கள் விரும்பக்கூடிய அரசுக் கல்லூரிகளை தோ்வு செய்து விண்ணப்பிக்கலாம்.