திருவாரூா் மாவட்டத்தில் தடையின்றி பாதுகாப்பான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தொடா்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பல்லவிவா்மா உடனிருந்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: கூட்டுக்குடிநீா் திட்டசெயல்பாடுகள், மின்சாரம் தொடா்பான செயல்பாடுகளில் புகாா் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுக்குடிநீா் திட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனடியாக போா்க்கால அடிப்படையில் சரி செய்து, பாதுகாப்பான குடிநீரை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். கோடைகாலம் என்பதால் மின் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் இன்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் (மின் பகிா்மானக் கழகம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பருத்திக்கு கூடுதல் விலை: ஆட்சியா் வேண்டுகோள்

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா்

தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



