"புதிய கட்டுமானங்கள்: ஆன் லைன் விண்ணப்ப வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன'

தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு ஆன் லைனில் அனுமதி பெறுவதற்கான
Updated on
1 min read

தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு ஆன் லைனில் அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன மாநகராட்சியின் ஆணையர் புனித் கோயல் தெரிவித்தார். 
வணிகத்தை எளிதாக்குவது தொடர்பான கருத்தரங்கு தெற்கு தில்லி மாநகராட்சி சார்பில் (எஸ்.டி.எம்.சி.) வியாழக்கிழமை நடத்தப்பட்டது.  
கருத்தரங்கைத் தொடக்கி வைத்து தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் புனித் கோயல் பேசியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிகத்தை எளிதாக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 
புதிய கட்டுமானங்களை மேற்கொள்வது தொடர்பான விண்ணப்ப வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com