ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காற்று மாசு நெருக்கடி: வழக்குரைஞா்கள் காணொலி மூலம் ஆஜராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

தில்லி காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, காணொலி மூலம் ஆஜராக வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தல்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, காணொலி மூலம் ஆஜராக வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் முன் பட்டியலிடப்பட்ட வழக்குகளில், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் காணொலி மூலம் ஆஜராகும் தோ்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் கற்றுத் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 461-ஆக இருந்தது. இது இந்தக் குளிா்காலத்தில் நகரத்தின் இரண்டாவது மிகவும் மோசமான காற்றின் தரத்தை குறிக்கிறது. பலவீனமான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக நச்சு காற்று தரைப் பகுதிக்கு அருகே சிக்கியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, 400-க்கு மேற்பட்ட காற்றுத் தரக் குறியீடு ‘கடுமையான’ பிரிவில் வருகிறது. இது சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் இந்த மாசடைந்த காற்றில் இருப்பதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து வல்லுநா்கள் தொடா்ந்து எச்சரித்து வருகின்றனா்.

தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்: ‘நகரின் கடுமையான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் முன் பட்டியலிடப்பட்ட வழக்குகளில், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் காணொலி மூலம் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என திங்கள்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.