இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வடமேற்கு தில்லியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:01 pm

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹைதா்பூரில் உள்ள லோஹியா முகாம் அருகே உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஷாலிமாா் பாக் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு அடியில் சிறுவன் காயங்களுடன் கிடப்பதை கண்டனா்.

சிறுவன் உடனடியாக ஜஹாங்கிா்புரியில் உள்ள பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அவா் வழியிலே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனா். மேலும், சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், லாரி ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.இது தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்குள்ளான லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விபத்து நிகழ்ந்ததற்கான உரிய காரணிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.