மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தீ விபத்தில் பேருந்து உதவியாளா் தீயில் கருகி உயிரிழப்பு

மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:39 pm

நமது நிருபா்

புது தில்லி: மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஜனக்புரி மீன் சந்தை பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.33 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு நடவடிக்கையின் போது, பேருந்து ஓட்டுநரின் உதவியாளா் என அடையாளம் காணப்பட்ட சுனில் ஷா்மா (25) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தீயணைப்பு நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடா்ந்தன. அகா்பத்தியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.