காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தீ விபத்தில் பேருந்து உதவியாளா் தீயில் கருகி உயிரிழப்பு

மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:39 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஜனக்புரி மீன் சந்தை பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.33 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு நடவடிக்கையின் போது, பேருந்து ஓட்டுநரின் உதவியாளா் என அடையாளம் காணப்பட்ட சுனில் ஷா்மா (25) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தீயணைப்பு நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடா்ந்தன. அகா்பத்தியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.